Categories: தமிழகம்

கடன் வாங்கிவிட்டு தந்தை இறந்துவிட்டார்.. நிதி நிறுவனத்தினர் எங்களை துன்புறுத்துகின்றனர் : கல்லூரி மாணவி கண்ணீர் மல்க புகார்!!

கோவை : கோவையில் தந்தை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிவிட்டு உயிரிழந்துவிட்ட சூழலில், கல்லூரியில் படித்து வரும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் நிதி நிறுவனத்தினர் மிரட்டி, தகாத வார்த்தைகளில் பேசி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியில் உள்ள தனது வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார்.

இந்த கடனை தங்கராஜ் மற்றும் அவரது தாய் குஞ்சம்மாள் ஆகியோர் செலுத்தி வந்த நிலையில், குஞ்சம்மாள் இறந்துவிட்டார். இந்த சூழலில், கடந்த ஆண்டு மே மாதம் தங்கராஜூம் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

தொடர்ந்து அவரது மகளும் கல்லூரி மாணவியுமான ராம்பிரபா பகுதி நேர வேலைக்கு சென்று கடனை சிறுக சிறுக திருப்பிச் செலுத்தி வந்தார். கல்லூரி படிக்கும் தன்னால் விரைவாக பணத்தை செலுத்த முடியவில்லை என்றும் அவகாசம் வேண்டும் என்றும் நிதி நிறுவனத்தாரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் மாணவியையும், பள்ளியில் படிக்கும் சகோதரிகளையும், அவரது தாயையும் மிரட்டி தகாத வார்த்தையில் பேசுவதாக மாணவி இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

இதுகுறித்து மாணவி கூறுகையில், “கோவையில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாங்கிய கடனுக்காக எனது தந்தையும், பாட்டியும் இறந்த பிறகு பகுதி நேர வேலைக்கு சென்று ரூ.23 ஆயிரம் செலுத்தினேன். ஆனாலும், உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி மிரட்டுகின்றனர். தகாத முறையில் பேசுகின்றனர். இதனால் தற்கொலைக்கும் முயன்றுவிட்டேன்.

ரூ.3 லட்சம் கடன் வாங்கியதற்கு ரூ.6 லட்சம் கேட்கின்றனர். இல்லையென்றால் வீட்டை பூட்டி சீல் வைப்போம் என்கின்றனர். மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளியில் படிக்கும் எனது 3 தங்கைகளையும் வைத்துக் கொண்டு என்னால் உடனடியாக கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.