திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து முழுவதுமாக எரிந்தது.
திண்டுக்கல் அரண்மனை குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்சாமி. இவர் வாடகைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று ஒத்த கண் பாலம் அருகே ஒரு இறந்த உடலை கொண்டு சென்று இறக்கி விட்டு பின்னர் நாகல்நகர் ரவுண்டானா அருகே அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை அருகாமையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பை தீப்பற்றியதில் எதிர்பாராதவிதமாக அருகில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனமும் தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் மளமளவென எரியத் தொடங்கிய தீயினால் ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதும் சேதமாகியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து நகர் வடக்கு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.