திண்டுக்கல் : கொடைக்கானலில் மூன்று மாத கர்ப்பிணியான இளம் பெண் மோனிஷா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் ஆரோக்கிய சாம் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் வசித்து வந்த மோனிஷா என்ற 23 வயதுப் பெண் வட்டகானல் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சாம் என்பவரை ஆறு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணமாகி ஆறு மாதம் முடிந்த நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்த மோனிஷா, கடந்த ஜூன் 4ம் தேதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாக, காவல்துறைக்கு மோனிஷாவின் கணவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வயது மோனிஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவர் எவ்வாறு தூக்கிட்டு கொள்வார் என்று, மோனிஷாவின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், விசாரணை தீவிர படுத்தவில்லை என ஆத்திரமடைந்த மோனிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர் கடந்த சில நாட்களுக்கு முன் நாயுடுபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று தற்கொலைக்கு தூண்டியதாக கூறி மோனிஷாவின் கணவர் ஆரோக்கிய சாம் என்பவரை கொடைக்கானல் காவல் துறை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.