டிபன் சாப்பிட வந்த போது மதுபோதையில் மட்டை… எழுந்து போக சொன்னதால் ஆத்திரம் ; பேக்கரியை சூறையாடிய அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி
வேடசந்தூரில் மது போதையில் மட்டையானவரை எழுந்து போக சொன்னதால், அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த யாசிர் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், இரவு கடைக்கு மது போதையில் வந்த அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் அருண்பாண்டி என்பவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.
அருண் பாண்டியன் மது போதையின் உச்சத்திற்கு சென்றதால் டேபிளிலேயே படுத்து மட்டையாகி உள்ளார். அவரை கடை ஊழியர்கள் எழுப்பிய போது, டேபிளை விட்டு எழுந்து தரையில் படுத்து உறங்கி உள்ளார். அதன் பிறகு பேக்கரி கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் அருண்பாண்டியை எழுப்ப முயன்றபோது அருண் பாண்டியன் அந்த ஊழியரை தாக்கியுள்ளார்.
அதனை தட்டிக் கேட்க வந்த பஷீர் என்ற முதியவரை தாக்கி கீழே பிடித்து தள்ளியதில் அவரின் மண்டை உடைந்தது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத அருண்பாண்டி கடையில் இருந்த டேபிள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். இதனால் பேக்கரியில் இருந்த தின்பண்டங்கள் சிதறின.
மது போதையில் இருந்தவரை கட்டுப்படுத்த முடியாத பணியாளர்கள் உடனடியாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலையில் காயமடைந்த பஷீரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, போலீசார் அருண்பாண்டியனிடம் விசாரணை நடத்திய போது, பேக்கரியில் பிரைட் ரைஸ் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறி போலீசாரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அருண் பாண்டியன் அதிக மது போதையில் இருந்ததால் மறுநாள் காலை காவல் நிலையம் வருமாறு கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நள்ளிரவு நேரத்தில் ஆத்து மேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.