திண்டுக்கல் ; பழனியருகே பெண்ணை கொலை செய்ய முயன்றபோது உறவினர்கள் வந்ததால் தப்பியோட முயன்ற குற்றவாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது மானூர். இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மணிமேகலை(52). கணவரை இழந்து வாழ்ந்து வரும் மணிமேகலைக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த மணிமேகலை, தற்போது தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டருகே மணிமேகலையின் உறவினரான தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு நவீன் (21) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் மணிமேகலை வீட்டினுள் சமையல் செய்து கொண்டிருந்த போது, அவரது உறவினரான நவீன்(21) என்ற இளைஞர் வீட்டிற்குள் புகுந்து கதவோரம் மறைந்து நின்றுள்ளார்.
அப்போது, வெளியே வந்த மணிமேகலை நவீனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட முயன்ற போது மணிமேகலையை கீழே தள்ளிய நவீன், மறைத்து வைத்திருந்த அம்மிக்கல்லை எடுத்து மணிமேகலையை தாக்க முயன்றுள்ளார். இதனை சுதாரித்துக்கொண்ட, நவீனை தள்ளிவிட்டு, வெளியே வந்து கூச்சலிட்டார்.
மணிமேகலையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், வீட்டிற்குள் இருந்த நவீன் பின்புறமுள்ள சுவற்றில் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது, அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும், அதில் இருந்த கம்பிகள் குத்தியதில் நவீன் கழுத்து, கைகளில் பலத்த காயமேற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கீரனூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த நவீனை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நவீன் எதற்காக மணிமேகலையை தாக்கினார் என்பது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.