சென்னையில் வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்த திமுக எம்எல்ஏவின் மகன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்
பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் 18 வயது இளம்பெண் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரை எம்எல்ஏவின் மருமகள் அடித்து துன்புறுத்தியதுடன், பல்வேறு விதமாக கொடுமைப்படுத்தி வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த இளம்பெண்ணின் கையில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும், தினமும் வேலை செய்யச் சொல்லி அடித்து கொடுமைப் படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்தார். இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்திருந்தனர்.
இந்த சூழலில், இன்று சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மருமகள் மெர்லின் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்த திமுக எம்எல்ஏவின் மகன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.