தருமபுரி: அரூர் கச்சேரி மேட்டில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாற்றுத்திறனாளி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு(52). இவர் இரண்டு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளி. இவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து வருகிறார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பல முறை கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதனடிப்படையில் அரூர் அடுத்த கீரைப்பட்டி இந்திரா நகரில் இருளர் காலனி பகுதியில் இவருக்கு பட்டா வழங்கப்பட்டது.
மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பகுதியில் குடிபெயர கூடாது என தெரிவித்து கிராம மக்களே அந்த நிலத்தை அபகரித்து கோவில் கட்டியதால் வேறு இடத்தை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பின்பு அரூர் அம்பேத்கர் நகர் பகுதியிலேயே இவருக்கு இரண்டு சென்ட் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்து அடித்தளம் அமைத்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஒதுக்கப்பட்ட இடமானது அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடம் என்பதால் அரூர் அடுத்த செக்காம்பட்டி கிராமத்தில் இவருக்கு வேறுரொரு இடமும் வழங்கப்பட்டது. அதற்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என தெரிவித்து தனக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும் இன்று அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த வருவாய் துறையினரிடம் கண்ணீர் மழ்க பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.