தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அரூர் ரவுண்டானாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக மாற்றுத்திறனாளி தினமான இன்று தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு செல்லும் வகையில், அரூர் ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே மாற்றுத்திறனாளி பெண் சபானா என்பவர், அவருடைய கணவருடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாற்றுத்திறனாளி பெண்ணை மாற்றுத்திறனாளியாக இல்லாத ஒரு ஆண் திருமணம் செய்யும் பட்சத்தில், இருவரில் ஒருவருக்கு அரசு வேலை என அரசாணை வெளியிட வேண்டும் எனவும், தங்கள் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா, இலவச மூன்று சக்கர எரிபொருள் வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே, மாற்றுத்திறனாளி பெண்ணான ஷபானா மற்றும் அவருடைய கணவர் காதர் பாட்ஷா ஆகிய இருவரும் அரூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.