Categories: தமிழகம்

பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு: நண்பனை திட்டமிட்டு கொலை செய்த 9 பேர் கைது…புதுச்சேரியில் அதிர்ச்சி..!!

புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கலில் வாலிபரை கொலை செய்த அவரது நண்பர்கள் ஒன்பது பேரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைகூடம் பின்புறத்தில் வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக இருப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டிருந்தது தமிழக பகுதியான கூனிமேட்டை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஷேக் திப்பு சுல்தான் என்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் யார் யார் உடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து அவரது செல்போஃன் பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் கடைசியாக சாரம் பகுதியை சேர்ந்த சிவா @ சிவசங்கரன் உடன் பேசி இருப்பது தெரியவந்ததை அடுத்து போலிசார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

இதனையடுத்து, சுல்தான தனக்கும் தனது நண்பர்களுக்கும் உடற் பயிற்சி கூடத்தில் பழக்கம் ஏற்ப்பட்டதாகவும், சுல்தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்வதாகவும் அதற்கு வட்டிக்கு பணம் வேண்டும் என்று கடந்த 1 வருடத்திற்கு முன்னர் கேட்டதை அடுத்து சிவா அவரது நண்பர்களான பிரபாகரன், சந்திரமோகன், ராஜேஷ், ஜாஹிர் ஹுசேன், கெஸ்தான் @ குட்டி கெஸ்தான், சரத்ராஜ், சகாயராஜ், சுரேஷ் ஆகியோர் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்தாகவும் இதற்கு அவர் மாதமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், கடந்த 2 மாத காலமாக சரிவர வட்டியும் தராமல் வாங்கிய பணத்தை திரும்ப தருவதாக கூறி அலைகழித்து வந்ததால் நேற்று இரவு சுல்தானை தனது நண்பர்களுடன் 45 அடி சாலை க்கு வரவழைத்து அங்கிருந்து நெல்லிதோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு மது அருந்தி கொண்டிருக்கும் போது சுல்தானை மறைத்து வைத்திருந்த இரும்பு ராட் மற்றும் பீர் பாட்டிலால் தலையில் தாக்கி அவரை ஆட்டோவில் ஏற்றி கொண்டு தட்டாஞ்சாவடியில் உள்ள மார்கெட் கமிட்டி கிடங்கின் பின்புறத்தில் வீசி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வேல்ராம்பட்டு ஏரிகரையில் தலைமறைவாக இருந்த சிவாவின் நண்பர்கள் 8 பேரையும் வடக்கு குற்ற பிரிவு போலிசார் கைது செய்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு ராட், பீர் பாட்டில், மூன்று இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 9 பேரையும் போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் கைதானவர்களில் ராஜேஷ், சரத் ராஜ், கெஸ்தான் @ குட்டி கெஸ்தான் ஆகியோர் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.