திருச்சி : திருச்சி தேர்தல் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த மகிளா காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் இன்று காங்கிரஸ் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி நகர் புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது தொடர்பான கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கேஎன் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதனையடுத்து திருச்சி காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு மகிளா காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியிக்கு குறைந்தது 16 இடங்களை கட்சி தலைமை பெற வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.