இந்த அறநிலையத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தான், இனிவரும் காலங்களில் தேர் விழாக்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் சித்திரை மாதம் என்றாலே கோவில் விழாக்கள், தேர் திருவிழாக்கள் நடப்பது வழக்கம், கோவில் மாநகரம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் தேர் திருவிழாக்களில் அரசு அதிகாரிகளின் கவனக்குறைவின் காரணமாக,
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் தேர் திருவிழாக்களில் தேர் மின் கம்பங்களில் சிக்கிக்கொள்வதும், சாலைகள் சீரமைக்காததால் குளறுபடி ஏற்பட்டு பள்ளத்தில் சிக்கியதாலும் மிகப்பெரிய இடையூறையும், வேதனையையும் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க: கழுகை விரட்ட அண்ணன் வைத்த குறி.. குறுக்கே வந்த மகன் ; ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தங்கை.. 2 பேர் கைது!!!
இத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தான், இனிவரும் காலங்களில் தேர் விழாக்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும். தஞ்சை மாநகர் என்றாலே கோவில் பிரசித்தி பெற்ற தளங்களாகும். இதுபோன்ற குளறுபடி நிகழ்வுகள் மக்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் அச்சத்தையும், பயத்தையும், மனவலியையும் ஏற்படுத்தி, தெய்வக்குற்றமாக பார்த்து உணர்வுபூர்வமான எண்ணத்தை கொடுத்து விடுகிறது.
இந்த ஆட்சியில் பல குடமுழுக்குகள், கோவில் திருவிழாக்கள் நடந்ததாக பெருமை பேசிக்கொள்ளும் அறநிலையத்துறை, ஏன் இதுபோன்ற விழாக்களில் முன்கூட்டியே கவனம் செலுத்துவதில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தமிழக மக்கள் பாரம்பரியமும், கலாச்சாரத்தையும் பின்பற்றுவர்கள். எனவே இனிமேல் தமிழக அரசு இதுபோன்ற கோவில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் செயல்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
This website uses cookies.