கோவை: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து செய்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் அடிப்படையில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு நடக்க இருந்தது.
வெள்ளலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவும், 7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தனர்.
முன்னதாக தேர்தல் அலுவலகமான வெள்ளலூர் பேரூராட்சி வளாகத்திற்கு வெளியே திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வாக்குப் பெட்டியை சாலையில் தூக்கி வீசப்பட்டது.
இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி, தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலை ஒத்திவைத்து ரத்து செய்தார். இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான பாலசுப்புரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 கவுன்சிலர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு குந்தகம், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாதது, பொது சொத்துக்கு சேதாரம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.