கோவை: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து செய்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் அடிப்படையில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு நடக்க இருந்தது.
வெள்ளலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவும், 7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தனர்.
முன்னதாக தேர்தல் அலுவலகமான வெள்ளலூர் பேரூராட்சி வளாகத்திற்கு வெளியே திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வாக்குப் பெட்டியை சாலையில் தூக்கி வீசப்பட்டது.
இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி, தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலை ஒத்திவைத்து ரத்து செய்தார். இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான பாலசுப்புரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 கவுன்சிலர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு குந்தகம், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாதது, பொது சொத்துக்கு சேதாரம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.