திமுக கட்சி டிஜிட்டல் பேனர்களை அகற்றியதால் நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து திமுக நகராட்சி கவுன்சிலரின் கணவர் நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை நகராட்சி அலுவலர்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, கடந்த 18ந் தேதி நாகப்பட்டினம் மாவட்ட அலுவலக வளாகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிலையம் எதிரே ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரின் கணவர் முகமது அபுபக்கர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, படங்கள் அகற்றப்பட்டது தொடர்பாக ஆணையர் மற்றும் ஊழியர்களை மிரட்டியும், தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கதவினை காலால் எட்டி உதைத்தும் அடாவடியில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள ஊழியர்களை கவுன்சிலரின் கணவர் முகமது அபுபக்கர் மிரட்டுவது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.