கரூர் ; குளித்தலையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான தோட்ட வீட்டில் இருந்து 151 கிலோ புகையிலைப் பொருட்களை தனிப்படை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி அருகே போலீசார் வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த குளித்தலை கடம்பர் கோவில் தெற்கு மணவாள தெருவை சேர்ந்த சாகுல் அமீது மகன்கள் ஆசாத், சாதிக் அலி இருபது வாகனங்களை நிறுத்திய சோதனையிட்ட போது, அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிய வந்தது.
மேலும், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் குளித்தலை பெரிய பாலம் அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோட்ட வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில் அவரிடமிருந்து 105 கிலோ ஹான்ஸ் பாக்கெட்களையும், 41 கிலோ கூல் லிப், விமல் பான் மசாலா பாக்கெட்டுகளையும், இருவரின் பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
இதில் சாதிக் வழக்கறிஞர் படிப்பு படித்துள்ளார். புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் தோட்டத்து வீடு முன்னாள் குளித்தலை நகர மன்ற துணைத் தலைவரும், தற்போதைய திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஜாபருல்லா என்பவருக்கு சொந்தமான தோட்டம் என்பது தெரியவந்துள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.