சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிடச் செய்ய முயன்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மடிப்பாக்கம் 188வது திமுக வட்டச் செயலாளராக இருந்தவர் செல்வம் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தனது மனைவியை திமுக சார்பில் போட்டியிட செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இது தொடர்பாக ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் செல்வம் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தி வந்தார்.
அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்ததுடன், சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திமுகவில் போட்டியிடுவதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்டிருப்பது சக கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகிய இருவரிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.