கோவை: கோவையில் திமுக நிர்வாகியின் கார் மோதி முதியவர் பலியான விபத்தில் டிரைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்
சிவானந்தா காலனி – கண்ணப்பன் நகரில் உள்ள பாலத்தின் அடியில் இன்று மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து வந்த அந்த முதியவரின் உறவினர்கள் கார் ஓட்டுநரை முற்றுகையிட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் கார் டிரைவரை மீட்டு முதியவரின் உறவினர்களை சமாதானம் செய்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்த முதியவர் 60 வயதான நடராஜன் என்பவர் என தெரியவந்துள்ளது. மேலும், விபத்தை ஏற்படுத்திய அந்த கார் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் நாச்சிமுத்துவின் கார் என்பதும், காரில் அவர் இல்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.