Categories: தமிழகம்

மகனை இழந்த சோகம்… தி.மு.க பிரமுகர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை..!

கன்னியாகுமரி : ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட களியக்காவிளையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கவிளை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான சகாயம் என்பவருக்கு திருமணமாகி சுகந்தியம்மாள் என்ற மனைவியும் டிபுரோகிலி என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் பெங்களூரில் எம்பிபிஎஸ் படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வாகன விபத்தில் பெங்களூரில் வைத்து இறந்துள்ளார். இதனை தொடர்ந்து வெளி உலக தொடர்பை தவிர்த்து வந்த இவர்கள் முழு நேரமும் வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். மகன் இறந்த துக்கம் அவ்வப்போது அவரை வாட்டி வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது வீட்டில் இரவு நேரத்தில் விளக்குகள் எரியவில்லை என பக்கத்து வீட்டை சேர்ந்த சுகுமாரன் என்பவர் குளப்புறம் ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை கேட்டு சகாயம் வீட்டிற்கு வந்த குளப்புறம் ஊராட்சி தலைவர் மனோன்மணி அவரது வீட்டின் உள்ளே சென்று பார்க்க முயன்ற போது வீட்டின் முன்பக்க கதவுகள் திறக்ககூடிய அளவில் மூடி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சகாயம் மற்றும் அவரது மனைவி சுகந்திய்ம்மாள் ஆகியோர் வீட்டின் ஹாலில் நைலான் கைரில் அருகருகே தூக்கில் தொங்கியபடி நாக்கு வெளியே தள்ளியபடி உடல் முழுவதும் இரத்தம் வழிந்தவாறு நின்றிருந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊராட்சி தலைவர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைபற்றி அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தூங்கி நின்றிருந்த இடத்திற்கு அருகில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் தங்களது மரணத்திற்கு யாரும் காரணமில்லை தங்களது செல்ல மகனை இழந்த துக்கத்திலேயே இந்த முடிவை எடுக்கிறோம் என எழுதி இருவரும் கையெழுத்து இட்டிருந்தனர். அதில் அவர்கள் கடிதம் எழுதிய தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் மூலம் அவர்கள் கடந்த 30 ம் தேதி இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.