தேனியில் நடந்த மாரத்தான் போட்டியின் மூலம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் தனியார் விளையாட்டு நிறுவனம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிக்கு நுழைவுக் கட்டணமாக தலா ரூ.300 வசூலிக்கப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் போட்டியாளர்களுக்கு முறையான குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற புகார் எழுந்தது.
மேலும், பங்கேற்பாளர்களுக்கு சைக்கிள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்குவதிலும் குளறுபடி நடந்ததாகக் கூறி பங்களாமேடு பகுதியில் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக போடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் என்பவர் மாரத்தான் போட்டி நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளருமான ஸ்டீபன் உள்ளிட்ட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, நம்பிக்கையூட்டி வஞ்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.