தேனியில் நடந்த மாரத்தான் போட்டியின் மூலம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் தனியார் விளையாட்டு நிறுவனம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிக்கு நுழைவுக் கட்டணமாக தலா ரூ.300 வசூலிக்கப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் போட்டியாளர்களுக்கு முறையான குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற புகார் எழுந்தது.
மேலும், பங்கேற்பாளர்களுக்கு சைக்கிள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்குவதிலும் குளறுபடி நடந்ததாகக் கூறி பங்களாமேடு பகுதியில் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக போடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் என்பவர் மாரத்தான் போட்டி நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளருமான ஸ்டீபன் உள்ளிட்ட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, நம்பிக்கையூட்டி வஞ்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.