தேனியில் நடந்த மாரத்தான் போட்டியின் மூலம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் தனியார் விளையாட்டு நிறுவனம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிக்கு நுழைவுக் கட்டணமாக தலா ரூ.300 வசூலிக்கப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் போட்டியாளர்களுக்கு முறையான குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற புகார் எழுந்தது.
மேலும், பங்கேற்பாளர்களுக்கு சைக்கிள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்குவதிலும் குளறுபடி நடந்ததாகக் கூறி பங்களாமேடு பகுதியில் நேற்று முன்தினம் காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக போடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் என்பவர் மாரத்தான் போட்டி நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளருமான ஸ்டீபன் உள்ளிட்ட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, நம்பிக்கையூட்டி வஞ்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.