தஞ்சை : கட்சியின் மூத்த முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் உங்களை பின்தொடர்ந்து இளைஞர்கள் அரசியல் பணியாற்றுவோம் தஞ்சையில் தி.மு.க மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கியவர், இனி பொற்கிழியை 10 ஆயிரம் ரூபாயாக வழங்கிட வேண்டும் என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, தி.மு.க வின் மூத்த முன்னோடிகள் 600 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது :- தி.மு.க வின் மூத்த முன்னோடிகளை பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக பார்க்கிறேன். அண்ணா, பெரியாரை நான் பார்த்ததில்லை. இங்கிருப்பவர்களில் பலர் அவர்களை பார்த்திருக்கலாம். நான் கலைஞரை பார்த்து வளர்ந்தேன். கட்சியின் மூத்த முன்னோடிகள் இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும். மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக இனி 10 ஆயிரம் வழங்கிட வேண்டும்.
இதனையடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், மாநகராட்சியில் பணிபுரிந்து காலமான 6 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 54 லட்சம் ரூபாய் பணிக்கொடையை வழங்கினார். பின்னர், சாலைகளில் சேரும் மண்ணால் விபத்து ஏற்படுவதை தடுத்திட 66 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாலையை தூய்மை செய்திடும் வாகனத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், தஞ்சை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தஞ்சை மேயர் துணை மேயர் உள்ளிட்போர் பங்கேற்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.