திருப்பூர் மாவட்டத்தில், வளர்ச்சி்த்திட்ட பணிகளை துவக்கி வருகை தந்த நீலகிரி எம்.பி ராசா முற்றுகையிட்ட பெண்கள், நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ரூ.1.25கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சமுதாயநலக்கூடம், அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 3வது வார்டு ஏரித்தோட்டம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.21 கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, 16,17, 18வது வார்டு சாலை மையப்பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளை திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 91 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி எம்.பி ஆ. ராசா துவக்கி வைத்தார்.
அப்போது, அங்கிருந்த பெண்கள, நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து வசதி இல்லை எனவும் ஆ. ராசாவிடம் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பந்தபட்ட துறை அலுவலரை அழைத்து விபரங்களை கேட்டறிந்த எம்.பி., கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து, நபர் ஒருவர் கேள்வி கேட்க, ஆத்திரமடைந்த ஆ.ராசா, ‘இரு-யா போன் போட்டுட்டு இருக்கோம்’ என சத்தம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.