விருதுநகர் – ராஜபாளையம் பகுதியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் உள்ளதாக தென்காசி திமுக எம்பி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் பாலின வள மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் (திமுக) தனுஷ் M குமார், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் சிங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலின மையத்தை திறந்து வைத்தனர்.
பெண்கள் பணிபுரியக்கூடிய இடத்தில் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றால், அவர்களுக்கு உடனடியாக தங்களுக்கு தேவையான இடத்தை உடனடியாக நாடிச் செல்ல முடியாத சூழலில் இதுபோன்ற மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு விருதுநகரில் ஒரு மையம் ஒன்று உள்ளது அடுத்தபடியாக இராஜபாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இதை தொடர்ந்து, பேசிய தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார், பெண்களுக்கு பாலியல் ரீதியான வன்கொடுமைகள் இராஜபாளையம் பகுதியில் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த மையம் திறப்பது நமக்கு பெருமை அல்ல வருத்தம் தான் அளிக்கிறது. தமிழக அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மையங்கள் திறப்பதற்கு அவசியமில்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பேசினார்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.