பேர்ணாம்பட்டில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க மனு கொடுத்தால் திமுகவினர் கொலை மிரட்டல் விடுவதாகவும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மண்டியிட்ட விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
மாதந்தோறும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் DRO தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்து வருகின்றனர். அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அப்போது பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணண் என்பவர் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள பத்தலப்பள்ளி மலட்டாறு மற்றும் மலை பகுதிகளில் திமுக பிரமுகர் ராஜமார்த்தாண்டம் என்பவர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் இதனால் விவசாயம் பாதிக்கிறது என அதிகாரிகளிடம் மனு அளித்ததால் என்னை கார் ஏற்றி கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இது குறித்து SP அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை நான் தனியாக வீட்டில் வசித்து வருகிறேன். எனது உயிருக்கு அச்சுருத்தல் உள்ளது என்னை காப்பாற்றுங்கள் என கூறி ஆட்சியரிடம் மண்டியிடு (கீழே படுத்து) கோரிக்கை வைத்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதில் அளித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.