விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் 90 வயதுடைய முதியவர்கள் கொரோனா கட்டுபாடுகளை கடைபிடித்து ஆர்வத்துடன் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்கு சாவடி மையங்களில் இளைஞர்கள், முதியவர்கள் என வாக்காளர்கள் ஆர்வத்துடன் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சண்முகாபுரம் 36 வது வார்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம் பி கெளதமசிகாமணி ஆகியோர் குடும்பத்துடன் வருகை புரிந்து வாக்கினை செலுத்தினர். இதே போன்று இளைஞர்கள், பெண்கள் முதியவர்கள் அனைவரும் வாக்களித்து வருகின்றனர்.
மருதுமேடு பகுதியினை சார்ந்த 90 வயதுடைய வைத்திலிங்கம் என்ற முதியவர் வாக்கினை செலுத்தினார்.
தனது வாக்கினை செலுத்திய அமைச்சர் பொன்முடி திமுக வேட்பாளர் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் தமிழக முதலமைச்சரின் நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் மொத்தமாக உள்ள 210 பதவிகளில் 208 பதவிகளுக்கு 346 வாக்கு சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 935 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நகர் உள்ளாட்சி தேர்தலில் 64 பதற்றமான வாக்கு சாவடிகள் உள்ளதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 1150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆண் வாக்காளர்கள் – 1 லட்சத்து 42 ஆயிரத்து 22 பேரும், பெண் வாக்காளர் – 1லட்சத்து 51 ஆயிரத்து 109 பேரும், மூன்றாம் பாலினத்தவர் – 55 பேரும் என மொத்தமாக 2 லட்சத்து 93 ஆயிரத்து 186 பேர் வாக்களிக்க உள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி பொருத்தவரை 42 வார்டுகளுக்கு 129 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் நகரில் மட்டும் 23 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 838 மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் பணியில் 1648 ஆசிரியர்கள் 10 தேர்தல் அலுவலர்கள் 40 உதவி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் பேரூராட்சியில் இரு திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.