வேலூர் : வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டீ கடையில் ஒன்றில் அனைவருக்கும் டீ போட்டு அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் காஞ்சனா இன்று மக்கான் அம்பேத்கார் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு சென்ற வேட்பாளர் கடையில் மீன்களை வெட்டி பொது மக்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதேபோல அருகில் உள்ள டீ கடைக்கு சென்ற அவர், அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.இதேபோல பிரியாணி கடையிலும் அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பேசிய அவர், இப்பகுதியில் நான் வெற்றி பெற்றால் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.