ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் செயல்பட்டு வரும் அகிலா வித்யாலயா என்ற பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவரை பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்றால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என மாணவனின் பெற்றோரிடம் பள்ளி தாளாளர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பகுதியில் அகிலா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்றால் பள்ளியின் உள்ளே அனுமதிக்க முடியாது என அப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோரிடம் பள்ளி தாளாளர் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று குறைந்த பிறகு தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளதால் மெட்ரிக் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்திருந்தது.
மேலும் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் யாரையும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கவில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேச வில்லை எனவும் சான்றிதழ் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கும் நிலையில் அகிலா வித்யாலயா பள்ளி தாளாளர் மாணவரின் பெற்றோரிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தினால் அதற்கு முறையான ரசீது வழங்கவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.