கோவை: வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் குடத்தினுள் நாயின் தலை மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் சந்தைகடை பகுதியில் தெரு நாய் ஒன்று தாகத்தை தணிக்க அப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது.
அப்போது தான் தெரியும் அந்த குடத்தில் தண்ணீர் இல்லை ஓட்டையென்று, தொடர்ந்து தலையை வெளியே எடுக்கும் போது நாயின் தலை பிளாஸ்டிக் குடத்தினுள் மாட்டிக்கொண்டது. இதனையடுத்து செய்வதறியாமல் தவித்த நாய் ரோட்டில் அங்கும் இங்குமாக கண்கள் தெரியாமல் ஒடிக்கொண்டுள்ளது.
அரை மணி நேரத்திற்கு மேலாக தவித்த நாயை, அப்பகுதி மக்கள் குடத்தினுள் மாட்டிக்கொண்ட நாயை பிடித்து பத்திரமாக குடத்தை மட்டும் அறுத்து எடுத்து மீட்டனர். இந்த சம்பவத்தில் மிரண்டு போன நாய் குடத்தை அறுத்து எடுத்ததும் மின்னல் வேகத்தில் ஓடியது. தற்போது குடத்தினுள் தலை மாட்டிக்கொண்டு நாய் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.