அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது என மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு தலைவர் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநில கல்விக் கொள்கை தொடர்பாக மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி புதுக்கோட்டை பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை உயர் மட்ட குழுவினரிடம் கூறினர்.
இக்கூட்டத்தில் பேசிய அரசு பள்ளி மாணவர் : கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும்.
தயவு செய்து PET பீரியடில் பாடம் நடத்தாதீங்க, அனைத்து பள்ளிகளிலும் பீட்டி பீரியடில் விளையாடுவதற்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதேபோல் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தற்போது தொடக்கப் பள்ளியில் வழங்கும் சிற்றுண்டி திட்டத்தை உயர்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.
இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்பாக அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் ஒருவர் கேட்டதற்கு : உயர் மட்டக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் அதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை, அது அவர்களது சொந்த விருப்பம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.