கவுன்சிலரிடம் அநாகரிகமா பேசாதீங்க : கொந்தளித்த பெண் உறுப்பினர்… கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிகாரிகள்!
கோவை மாவட்டம் காரமடை நகராட்சியின் அவசர நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் உஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியவுடன் சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா நேற்று முன் தினம் காலமானார்.
இக்கூட்டத்தில் சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து கூட்டம் தொடங்கிவுடன் நகராட்சி 15 வது வார்டு உறுப்பினர் நித்யா,நான் ஒரு பெண் கவுன்சிலர். பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.
நகராட்சி கமிஷனர் என்னிடம் மரியாதை குறைவாக பேசுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக நான் எனது வார்டில் எந்த பணிகளும் நடப்பது இல்லை. எனது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆணையாளரிடம் தொலைபேசி வாயிலாக பேசும் போது அவர் அநாகரிகமாக பேசியதுடன் கோபமாக செல்போன் இணைப்பை துண்டித்தார்.
இதுதான் நாகரீகமா, மேலும் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மிரட்டுகிறார் என குற்றம் சாட்டினார். இதனையடுத்து மன்றத்தில் இருந்த மற்ற தி.மு.க., அதி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கவுன்சிலர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோபமடைந்த ஆணையாளர் மனோகரன், “நான் பேசியது தவறு என்று நீங்கள், நினைத்தால் நான் இந்த மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன்,” என சொல்லிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கமிஷனர் மனோகரன் உடன் அனைத்து அதிகாரிகளும் வெளிநடப்பு செய்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.