கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, மேம்பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக, அருகிலேயே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் உள்ள குடி தண்ணீர் குழாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் ஒரு அடி பள்ளத்தில் தண்ணீர் தேங்கியவாறே இருந்து வருகிறது. இதுபோன்று தண்ணீர் தேங்கிய நிலையில் பல குழிகள் அங்குள்ளன.
எந்த நேரமும் விபத்து ஏற்படலாம் என்ற சூழல் இருப்பதால், குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றும், அதேவேளையில் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் புகார் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், 30 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வீணாகி வருகிறது.
இந்த மோசமான சாலையால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் இருக்கும் பகுதியில் உள்ள சாலையில் குழாய் உடைப்பால் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மாணவர்கள் பீதியுடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையால் ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, குடிநீர் வாரிய (TWAD) அதிகாரிகள் கவனம் செலுத்தி அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.