கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, மேம்பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக, அருகிலேயே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் உள்ள குடி தண்ணீர் குழாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் ஒரு அடி பள்ளத்தில் தண்ணீர் தேங்கியவாறே இருந்து வருகிறது. இதுபோன்று தண்ணீர் தேங்கிய நிலையில் பல குழிகள் அங்குள்ளன.
எந்த நேரமும் விபத்து ஏற்படலாம் என்ற சூழல் இருப்பதால், குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றும், அதேவேளையில் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் புகார் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், 30 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வீணாகி வருகிறது.
இந்த மோசமான சாலையால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் இருக்கும் பகுதியில் உள்ள சாலையில் குழாய் உடைப்பால் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மாணவர்கள் பீதியுடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையால் ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, குடிநீர் வாரிய (TWAD) அதிகாரிகள் கவனம் செலுத்தி அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
This website uses cookies.