மதுபோதையில் சாலையில் பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, சுமார் 25 கி.மீ வரை காரை ஓட்டி வந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தஞ்சை – திருச்சி சாலையில் , திருச்சி நோக்கி வந்த வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று அசுர வேகத்தில் சென்றது. இந்த காரை ஓட்டி வந்த நபர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, வளம்பக்குடி திருச்சி மாவட்டம் துவாக்குடி, பாய்லர், திருவெறும்பூர், கைலாஷ் நகர் உள்ளிட்ட இடங்களில் 3 பெல் ஊழியர்கள் உட்பட 15 பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது.
இது குறித்து உடனடியாக காவல்துறை வயர்லெஸ் குளம் அனைத்து காவல் செக் போஸ்ட்களையும் அலார்ட் செய்தனர். அப்போது அந்த கார் காட்டூர் ஆயில்மில் செக் போஸ்டில் தடுப்பு கட்டைகளை மீறி சென்றது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர், அந்த ஸ்கார்பியோ காரை அரியமங்கலம் பால்பண்ணை ட்ராபிக் சிக்னலில் மடக்கி பிடித்தனர். அதில் மதுபோதையில் காரை ஓட்டிவந்த நபரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தஞ்சை மாவட்டம் மெடிக்கல் காலேஜ் சேர்ந்த ஆரோக்கிய லூர்து நாயகம் என்பதும், அதிக மது போதையில் 50 கி.மீ தூரம் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
காரின் முன்பக்க டயர் தேய்ந்து ரிம்முடன் அந்த காரை போதை ஆசாமி ஓட்டி வந்துள்ளான். மேலும், திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியில் கடைசியாக விபத்து ஏற்பட்டதால், அந்த நபரை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஜீப்பில் ஏற்றிய போது, என்னை முன்பக்க சீட்டில் உட்கார வையுங்கள் என சைக்கோ தனமான நடந்து கொண்டான்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபரை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த கார் யாருடையது, இவன் மதுபோதையில் காரை ஓட்டி வந்தாரா? அல்லது வேறு ஏதும் போதை வஸ்துக்களை உட்கொண்டு ஓட்டி வந்தாரா? எத்தனை பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளான்? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.