கோவை: கட்டுமான பணியின்போது பொருட்கள் சரிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் வீரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (77). இவர் தனது குடும்பத்தினருடன் கோவை பீளமேடு ராமானுஜம் நகரில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று சின்னக்கண்ணு வெள்ளலூர் ரோடு கனகசபாபதி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டிட பணிக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுமானம் சரிந்து சின்னக்கண்ணு தலை மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைபலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புகாரின் பேரில், போத்தனூர் போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிக்கு அமர்த்திய கட்டிட உரிமையாளர் ராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.