Categories: தமிழகம்

12 மணி நேரமே இருந்த மின்சாரம் தற்போது 22½ மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது : அமைச்சர் எம்.ஆர் காந்தி பேச்சு!!

கடந்த 2018 ஆண்டுகளில் 12 மணி நேரம் மட்டுமே இருந்த மின்சாரம் தற்பொழுது 22½ மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மின்சக்தி @ 2047 விழாவில் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் தனியார் திருமண மண்டபத்தில் நாட்டின் 75 வது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @2047 மின்சாரப் பெருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்தவிழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கலந்து கொண்டு பேசிய மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் மின்சாரத்துறையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

அதேபோல் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று நீண்ட ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருந்த விவசாயிகளுக்கு ஒரே வருடத்தில் ஒரு லட்சம் பம்பு செட் மின் இணைப்புகளை வழங்கினார்.

மேலும் கடந்த 2018 ஆண்டுகளில் 12 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருந்து வந்த நிலையில் தற்பொழுது 22 ½ மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்தியாவின் மின் துறையின் முக்கிய சாதனைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக அதன் புரட்சிமிகு பயணத்தில் உறுதுணையாக இருந்தவர்களுக்கும் ஆத்மநிர்பர் பாரத் சுயசார்பு கொண்ட பாரதம் என்ற நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு உணர்வை செயல்படுத்தும் சக்தியும், திறனும் கொண்டவர்களுக்கு சமர்ப்பிக்கும் விழாவாகவும் கடந்த 8 ஆண்டுகளில் மின்சார துறையின் சாதனைகளை கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மின்சாரத் துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனை குறும்படம் போட்டு காட்டப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

24 minutes ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

34 minutes ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 hour ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

2 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

2 hours ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…

3 hours ago

This website uses cookies.