Categories: தமிழகம்

திமுக எம்பி ஆ.ராசாவின் அரசியல் அத்தியாயத்திற்கு விரைவில் END CARD : பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!!

தமிழக அரசை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்..

சி. பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தமிழகமெங்கும் தமிழக அரசின் கையாலாகாத தனத்தை கண்டித்தும், ஒரு நாள் உண்ணாவிரதம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

திமுக இன்றும் என்றும் தன்னை திருத்தி கொள்ளப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடத்தில் வெளிப்படுத்திருக்கிறது .மாநில அரசு மக்களை காக்கும் அரசாக இருக்க வேண்டும்.

திமுக அரசு பொய் ஆட்சி நடைபெறுகிறது. வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார்களோ அதில் ஒவ்வொன்றாக மறந்து வருகிறார்கள். அதனை கண்டித்து இந்த அறப்போர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

திமுக என சொன்னாலே ஊழலோடு பிறந்து வளர்ந்து திகழ்ந்து வருகிறது. மக்கள் நலன் இன்றி தங்கள் நலன் மட்டுமே கொண்டுள்ளனர். இதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் மத்திய அரசின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

அக்னி பாத் திட்டத்தில் வாய்ப்பு தேடி அலையும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். எந்த இடத்திலும் ராணுவத்திற்கு நிரந்தரமாக ஆளை எடுக்க மாட்டோம் என மத்திய அரசு கூறவில்லை. இந்த திட்டம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தேசபக்தியை தரும் பயிற்சியாக இது இருக்கும் பல வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தரும் பயிற்சியாக இது இருக்கும்.

எந்த திட்டத்தை மோடி கொண்டு வந்தாலும் அதை ஏளனப்படுத்தி அதன் மூலம் திமுக அரசு அரசியல் செய்து வருகிறது. தாமரை விரைவில் தமிழகத்திலும் மலரும். அதிமுக தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டனியில் வந்துவிட கூடாது என்பதற்காக ஆயிரம் ரூபாய், பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக கூறினர்.

ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல் டீசல் வருவதற்கு மத்திய அரசு தயாராக இருந்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் முதல் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். 2 ஜி யிலிருந்து ஆ. ராசா தன்னிடம் உள்ள பணத்தின் மூலம் தப்பித்து வரலாம். பிரிவினை மூலம் ஆ. ராசா முன்னேற முயன்றால் அவரது அரசியல் அத்தியாயம் முடிவடையும் எனக் சி. பி. ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.