டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று வரலாற்றை மாற்றி ரஜினி, கமல் பேசியது வருத்தம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எப்போதும் போல் ஆலோசனை வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முழு வீச்சில் பணியாற்ற வியூகங்கள் குறித்து பேசினார். தென் மாவட்டங்களில் எப்போதுமே அதிமுக ஆதரவு தான். சிறுபான்மையினர் கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டதில் ஆதரவு அதிகம் உள்ளது.
கூட்டணி அமைப்போம் என்று பொதுச் செயலாளர் சொல்லி உள்ளார். வரலாற்றை மறைக்க கூடாது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவுக்குப் பிறகு, யார் தலைவராவது என்று பேச்சு வந்த போது எல்லாரும் நாவலர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்று சொன்ன போது, எம்ஜிஆர் தான் டாக்டர் கலைஞர் வர வேண்டும் என்று சொன்னவர்.
நடிகர் எஸ்எஸ்ஆர் எல்லாம் சந்தித்து பேசி அடிப்படை மக்களின் தேவையை நிறைவேற்றுபவர் என்று டாக்டர் கலைஞரை தேர்வு செய்தனர். இதனை எங்கள் தங்கம் படத்தில் அவரே பேசி உள்ளார். முரசொலி மாறன் கூட எம்ஜிஆர் இல்லை என்றால் எங்கள் குடும்பத்தினர் தெருவுக்கு வந்து இருப்போம் என்று தெரிவித்தார்.
டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று வரலாற்றை மாற்றி ரஜினி, கமல் பேசியது வருத்தம். கமல் விக்ரம் படத்திற்கு பிறகு திமுகவுக்கு வாயை வாடகைக்கு விட்டு விட்டார். ஆனால் எப்போதும் நியாமாக பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்படி பேசிவிட்டார் என்பது வருத்தம்.
வள்ளலுக்கு எல்லாம் வள்ளல், திராவிட கர்ணன் என எம்ஜிஆருக்கு பெயர்சூட்டியவர் கருணாநிதி. ஆனால் ரஜினிகாந்தும் தவறாக, எம்ஜிஆரின் வரலாற்றை மறைத்து பேசியது தவறு. நேர்மையாக பேசும் ரஜினி அப்படிப் பேசியது வருத்தம் தருகிறது. நாங்கள் ரஜினி இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.
ஆட்சிக்கு பயந்து தனது சிவாஜி படத்திற்கு ஏற்பட்டதுபோல், பாதிப்பு இனிவரும் படங்களுக்கு வந்து விடக்கூடாது என பயந்து ரஜினி இப்படி பேசியுள்ளார், எனக் கூறினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.