கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் 60 லட்சம் பேருக்கு கூட கொடுக்க முடியாத சூழல் நிலவுவதால் விதிமுறைகளை தளர்த்தி உள்ளனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பரவையில் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பிரச்சார வாகனத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அழைப்பிதழும் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களை மாநாட்டிற்கு அழைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;- அதிமுக மாநாடு தங்களுக்கான மாநாடாக மக்கள் நினைக்கிறார்கள். அதிமுக மாநாட்டால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இதுபோன்ற எழுச்சி எப்போதும் ஏற்பட்டதில்லை. 1972ல் கருணாநிதி ஆட்சியை அகற்ற மக்கள் ஒன்று சேர்ந்தார்கள். தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் ஆட்சியை அகற்ற அலைஅலையாய் மக்கள் அதிமுக கூட்டங்களுக்கு வருகிறார்கள், என தெரிவித்தார்.
மேலும், ஓய்வூதியம் பெறும் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கலைஞர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முதல்வர் பெண்களுக்கு கொடுக்க நினைக்க டார்கெட்டை எட்ட முடியவில்லை. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் 60 லட்சம் பேருக்கு கூட கொடுக்க முடியாத சூழல் நிலவுவதால் விதிமுறைகளை தளர்த்தி உள்ளனர்.
இன்னும் என்னனென்ன செய்ய உள்ளார்கள் எனத் தெரியவில்லை. 1000 கொடுத்தால் மட்டுமல்ல ஒருகிலோ தங்கத்தை வீட்டுக்கு வீடு கொடுப்பதாக திமுக சொன்னாலும் மக்கள் அதை வாங்கவும், திமுகவுக்கு வாக்களிகவும் தயாராக இல்லை. சாதிக்கலவரம், மதக்கலவரம் நடப்பதால் திமுக ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள், என தெரிவித்துள்ளார்.
அதிமுக மாநாட்டிற்கு முக்குலத்தோர் அமைப்பினர் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு, “சில பேரின் தூண்டுதல் காரணமாக மாநாட்டை சில அமைப்பினர் எதிர்க்கிறார்கள்,” என்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.