சென்னை : தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்ய முயன்ற தனிப்படை போலீசாரை கத்தியால் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த நடராஜன் (எ) பாம்கை நடராஜன் (24) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு நிதிமன்றம் பிடி ஆணை வழங்கியது. இதையடுத்து சென்னை பெரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று சென்னையில் அவர் பதுங்கியிருக்கும் பகுதி குறித்து போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரை பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசாரை கண்டதும் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்கு என 26 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.