வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலின சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்தப் பதவிக்கு போட்டியிட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த கல்பனா சுரேஷ் ஆதிதிராவிட பிரிவினர் என போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார்.
போலி ஜாதி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, கல்பனா சுரேஷை எதிர்த்துப் போட்டியிட்ட தோளப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் வேலூர் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ‘விழிக்கண்’ குழு நடத்திய விசாரணையில், கல்பனா சுரேஷ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்தது போலி சாதிச் சான்றிதழ் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது சாதிச் சான்றிதழ் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் உரிமையும் ஆட்சியரால் பறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்த கல்பனா சுரேஷ் அவரது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.