தனது ரசிகர் மன்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா ஆறுதல் கூறினார்.
நாமக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கடந்த 21 -ந் தேதி நாமக்கல் – துறையூர் சாலையில் ஜெகதீஷ் சென்று கொண்டு இருந்போது சாலை வளைவில் லாரி மோதியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து ஜெகதீஷை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த ஜெகதீஷ் சூர்யா ரசிகர் மன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
இதையறிந்த நடிகர் சூர்யா, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக நாமக்கல் மேட்டுத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு திடீரென வந்தார்.
பின்னர் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகி ஜெகதீஷ் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, அவரது மனைவி ராதிகா மற்றும் 3 வயது பெண் குழந்தைக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.
நடிகர் சூர்யாவை காண பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.