விழுப்புரம்: நிலத்தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே அண்ராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது நிலம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் நிலம் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், சின்னராஜ் தனது நிலத்தில் இருந்த சவுக்கு கன்றுகளை பிடுங்கி எறிந்தது குறித்து முருகனிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் சின்னராஜை தடியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சின்னராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் சின்னராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சின்னராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் முருகனை உடனே கைது செய்யக்கோரியும் சின்னராஜ் உறவினர்கள் திரு வெண்ணெய்நல்லூர்- திருக் கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.