திருவண்ணாமலை : தனியார் விதை கம்பெணியிடம் வாங்கிய பருத்தி விதை தரமற்ற முறையில் இருப்பதாக வேளாண் துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமஜெயம். இவர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பருத்தி சாகுபடி செய்துள்ளார்.
ஆத்தூர் பகுதியில் இயங்கி வரும் ராசி விதைகள் உற்பத்தி நிலை அதிகாரிகளிடம், சுமார் 15 கிலோ விதைகளை பெற்று பருத்தி நடவு செய்த விவசாயி ராமஜெயம் கடந்த மூன்று மாதங்கள் கடந்த நிலையில், பருத்தி பயிர் முறையாக வளரவில்லை என பருத்தி விதை தயாரிப்பு அதிகாரியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், விதை தயாரிப்பு நிறுவனம் குறித்து செங்கம் வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகளிடம் பலமுறை தனியார் கம்பெனியின் விதைகளை ஆய்வு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இனி தனியார் விதை தயாரிப்பு கம்பெனியால், எந்த ஒரு விவசாயியும் விதைகள் வாங்கி பாதிக்கக் கூடாது என கூறி விவசாயி ராமஜெயம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் விவசாயி ராமஜெயத்துடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு செங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.