Categories: தமிழகம்

மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை பயிரிட்ட விவசாயி..இந்தாண்டும் விளைச்சலில் ஏமாற்றம் : விரக்தியில் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வானுமாமலை. இவர் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது விவாசயத்தை நம்பியே இவரது குடும்பத்தின்ர் உள்ளனர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த இரண்டு வருடம் வாழை பயிரிட்டு இருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காலம் என்பதால் பலரும் பொருளாதார ரீதியில் பலர் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர், இந்த நிலையில் வானுமாமலையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார்,

இதனிடையே இந்த ஆண்டும் வானுமாமலை அவருடைய மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை பயிரிட்டுள்ளார். தற்போது பயிரிட்ட வாழை விளைச்சல் சரி வர இல்லாததால் வானுமாமலை மிகுந்த கவலையில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய தோட்டத்தில் வயலுக்கு வைத்து இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். பின்னர் மயங்கிய அவர், தோட்டத்திலேயே கீழே விழுந்து கிடந்து உள்ளார்.

இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் அவரை மீட்டு ஏர்வாடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

அங்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வானுமாமலை உயிரிழந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!

சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…

2 hours ago

கழுத்தை நெறித்து 3 வயது குழந்தை கொலை.. விசாரணையில் சிக்கிய தாய் : கடைசியில் டுவிஸ்ட்!

திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…

3 hours ago

விடாது கருப்போட காப்பியா? சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலால் எழுந்த சந்தேகம்?

90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…

3 hours ago

பாகிஸ்தானுக்கு உதவாதீங்க; கம்முனு இருங்க- நெட்டிசன்களை பார்த்து எச்சரிக்கும் ராஜமௌலி

ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…

5 hours ago

சினிமாவை விட்டு விலகமாட்டேன்.. கர்ப்பம் ஆனால் கூட… டாப் நடிகை!

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…

5 hours ago

ராயல் சல்யூட்… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…

6 hours ago

This website uses cookies.