இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட்டு பூட்டு போட முயற்சித்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்துள்ளனர்.
மத்திய அரசு பத்து லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகள் மற்றும் எண்ணற்ற நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், ஏழை, எளிய விவசாயிகள் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனை வசூல் செய்வதற்காக ஐ.ஓ.பி போன்ற வங்கிகள் பிரதமர் மோடி பென்ஷன் திட்டம், ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை போன்றவற்றில் பிடித்தம் செய்த பின்னரே பணம் வழங்குகிறது.
இது போன்ற உதவித்தொகைகளில் கைவைக்கக் கூடாது என்று மத்திய நிதித்துறை கூறிய பிறகும் வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கண்டோன்மெண்ட் அருகே உள்ள ஐஓபி தலைமை அலுவலகத்தில் பூட்டு போடும் போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது. சுமார் 200க்கும் அதிகமான விவசாயிகள் ஐஓபி வாசல் முன்பாக நின்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வங்கி மேலாளரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கர தலைவர் அய்யாக்கண்ணு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு வங்கி மேலாளர் வராததால் வங்கிக்கு பூட்டு போட முயற்சித்தனர். வங்கி மேலாளரை கைது செய்ய கோரி கோசமிட்டனர். வங்கியை பூட்டு போட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.