Categories: தமிழகம்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்; பெற்ற மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த கொடூர தந்தை கைது..!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3 வது தெருவில் இருக்கும் காளிமுத்து – பிரியதர்ஷினி தம்பதியின் 9 வயது மகள் தன்ஷிகா.

அதே பகுதியில் உள்ள தையல் கடையில் டெயிலராக காளிமுத்து வேலை பார்த்து வருகிறார். கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் மனைவி பிரியதர்ஷினி வேலை பார்த்து வருகிறார்.

ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் 9 வயது சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பக்கெட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இதனையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில வருடமாக கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக தெரிய வந்தது. இந்நிலையில், காளிமுத்து மாயமானதால் அவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காளிமுத்துவை நேற்று பழங்காநத்தம் பகுதியில் போலீசார் அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, காளிமுத்து மனைவி பிரியதர்ஷினியுடன் ஏற்பட்ட தகராறு குறித்து, மகளிடம் புலம்பியுள்ளதாகவும், அதற்கு சிறுமியோ நாம் இருவரும் இறந்து விடுவோம் என்றும் கூறியதாகவும், இதனை அடுத்து வீட்டின் சமையலறையில், மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

பின்னர், உடலை வாளியில் வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து சாகலாம் என்று முடிவெடுத்தநிலையில், பயத்தின் காரணமாக மதுரையில் சுற்றி திறிந்தாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.