மனைவியின் நடத்தையில் சந்தேகம்; பெற்ற மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த கொடூர தந்தை கைது..!

Author: Vignesh
7 October 2022, 5:23 pm
Quick Share

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3 வது தெருவில் இருக்கும் காளிமுத்து – பிரியதர்ஷினி தம்பதியின் 9 வயது மகள் தன்ஷிகா.

அதே பகுதியில் உள்ள தையல் கடையில் டெயிலராக காளிமுத்து வேலை பார்த்து வருகிறார். கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் மனைவி பிரியதர்ஷினி வேலை பார்த்து வருகிறார்.

ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் 9 வயது சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பக்கெட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இதனையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில வருடமாக கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக தெரிய வந்தது. இந்நிலையில், காளிமுத்து மாயமானதால் அவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காளிமுத்துவை நேற்று பழங்காநத்தம் பகுதியில் போலீசார் அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, காளிமுத்து மனைவி பிரியதர்ஷினியுடன் ஏற்பட்ட தகராறு குறித்து, மகளிடம் புலம்பியுள்ளதாகவும், அதற்கு சிறுமியோ நாம் இருவரும் இறந்து விடுவோம் என்றும் கூறியதாகவும், இதனை அடுத்து வீட்டின் சமையலறையில், மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

பின்னர், உடலை வாளியில் வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து சாகலாம் என்று முடிவெடுத்தநிலையில், பயத்தின் காரணமாக மதுரையில் சுற்றி திறிந்தாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

Views: - 457

0

0