தஞ்சாவூர் : மது போதையில் பள்ளியில் புகுந்த ஒரு மாணவியின் தந்தை தலைமை ஆசிரியை அருவருக்கதக்க ஆபாச வார்த்தை திட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கள்ள பெரம்பூரில் அரசு உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது நேற்று காலை பிரேயர் நடந்து கொண்டு இருந்தபோது, அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் தந்தை செல்வக்குமார் மதுபோதையில் பள்ளி நுழைந்து தகராறு செய்தான்.
அவனை பள்ளியை விட்டு வெளியே செல்லுமாறு தலைமை ஆசிரியை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் தலைமை ஆசிரியை அருவருக்க கூடிய ஆபாச வார்த்தைகளால் திட்டினான்.
மேலும் நீ பொம்பள தான உன் சேலையை அவிழ்த்து விடுவேன் என மிரட்டினான். இதனை தட்டி கேட்ட உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் கண்ணத்தில் ஒங்கி அறைந்தான். இதனை மேலும் தடுக்க முயன்ற ஆசிரியர் முருக பூபதிக்கு அடி விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை அளித்த புகாரின் பேரில் பள்ளிக்குள் ரகளையில் ஈடுப்பட்டு தலைமை ஆசிரியை இருக்கையில் அமர்ந்து ஆசிரியர் சட்டையை இழுக்கும் மாணவியின் தந்தை செல்வகுமாரை கள்ள பெரம்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.