தருமபுரி : காரிமங்கலம் அருகே மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பள்ளியிலேயே பெண் சத்துணவு அமைப்பாளர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கிரிஜா(26). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. இவருடைய கணவர் கலைத்தென்றல் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 11மாத பெண் குழந்தை உள்ளது. கிரிஜா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சத்துணவு அமைப்பாளராக அதே சொன்னம்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கிரிஜாவுக்கு கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பணியில் தொந்தரவு செய்வதாகவும்,
குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட முட்டையில் குறைந்து உள்ளதாக கூறி கிரிஜாவை மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியர் சாந்தி அவமானப்படுத்திவிட்டதாகவும், தொடர்ந்து தன்னை அளவுக்கு அதிகமான தொந்தரவு கொடுப்பதாக இதில் மனமுடைந்த கிரிஜா பள்ளி சத்துணவு அறைக்குள்ளேயே தலைமை ஆசிரியை கண்டித்து 90 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை அவரே செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலையதளங்ககில் அனுப்பி உள்ளார்.
அப்போது அறையில் மயங்கி கிடந்த அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து பள்ளி கல்விதுறையினர் மற்றும் காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.