தமிழகம்

வேகமெடுக்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் கனமழை.. பாதை மாறுமா?

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனையடுத்து, இந்தப் புயலால் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே, குறிப்பாக காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று (நவ.30) கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் (OMR Salai) பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: காலிங் பெல் அடித்ததும் காணாமல் போன தாலிச்செயின்.. தனியாக இருப்பவர்களே உஷார்!

அதேநேரம், சென்னை புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கி வருகிறது. அதேநேரம், பிற்பகல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மாலை வேளையில் கடக்கும் என்றும், மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் எனவும் கூறப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.