திண்டுக்கல் : திண்டுக்கல் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் இரவு பணியின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அடுத்த பித்தளை பட்டியைச் சேர்ந்தவர் வித்யாபதி (48). இவர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக உள்ளார். வழக்கம் போல் நேற்று இரவு பணிக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை தீயணைப்பு நிலையத்தில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த சக ஊழியர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இவருக்கு இந்திரா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி(24) என்ற மகளும், தட்சிணாமூர்த்தி(19) என்ற மகனும் உள்ளனர். திவ்ய தர்ஷினி இன்று நடைபெறும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத சென்று விட்ட காரணத்தினால் தந்தை இறப்பு குறித்து அவருக்கு தெரியாது. மேலும் திவ்யதர்ஷினிக்கு இன்று பிறந்த நாள் ஆகும். இந்த சம்பவம் தீயணைப்புத்துறை காவலர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.