Categories: தமிழகம்

குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் வலைகளுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கையில் மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் மீன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு 1-1-2019 முதல் 31.12.2023 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு மீன் பாசி குத்தகை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் குளங்களை பொது ஏலம் விட போவதாக மாவட்ட கலெக்டருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் சங்கத்தில் உள்ள 761 மீனவ உறுப்பினர்களின் குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். எனவே குளத்தை பொது ஏலம் விட கூடாது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக பேசி மீனவர்களுக்கு வழிவகை செய்து வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க மீனவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

10 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

11 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

11 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

12 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

12 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

13 hours ago

This website uses cookies.