திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் காட்டுப்பள்ளி எல்என்டி தனியார் துறைமுகத்தை கப்பல்கள் நுழையும் பகுதியில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழவேற்காடு பஜார் பகுதியில் தனியார் நிறுவனம் தமிழக அரசிடம் உறுதியளித்த 1500 வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும், 250 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், இதற்கு அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மீனவப் பெண்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பழவேற்காடு பஜார் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மீனவ பெண்கள் மற்றும் மீனவர் சங்க கூட்டமைப்பினருடன் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியும், ஏற்காமல் இன்று தொடர்ந்து நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் அப்பகுதி முழுவதும் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே, படகுகளில் சென்று எல்என்டி மற்றும் அதானி தனியார் துறைமுகங்களுக்கு மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கப்பல்கள் நுழையாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.