திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் காட்டுப்பள்ளி எல்என்டி தனியார் துறைமுகத்தை கப்பல்கள் நுழையும் பகுதியில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழவேற்காடு பஜார் பகுதியில் தனியார் நிறுவனம் தமிழக அரசிடம் உறுதியளித்த 1500 வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும், 250 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், இதற்கு அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மீனவப் பெண்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பழவேற்காடு பஜார் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மீனவ பெண்கள் மற்றும் மீனவர் சங்க கூட்டமைப்பினருடன் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியும், ஏற்காமல் இன்று தொடர்ந்து நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் அப்பகுதி முழுவதும் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே, படகுகளில் சென்று எல்என்டி மற்றும் அதானி தனியார் துறைமுகங்களுக்கு மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கப்பல்கள் நுழையாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.